Saturday, July 7, 2007

மேலே வானம் கீழே நியூ யார்க்

From: "Raveendran Krishnasamy"
Date: Mon, 9 Apr 2007 00:43:09 -0400
Local: Mon, Apr 9 2007 12:43 am
Subject: Re: [NAMBIKKAI] Re: [muththamiz] Fwd: மேலே வானம்...கீழே நியூயார்க்....
Reply to author | Forward | Print | Individual message | Show original | Remove | Report this message | Find messages by this author
*மேலே வானம்....கீழே நியூ யார்க்....*


சென்ற சனிக்கிழமை (07-Apr-2007). நண்பர்களுடன் போர்ட் ஜெஃபர்சனிலிருக்கும்
ஃபோர்ட் வரை ஒரு உலா. வார விடுமுறை என்பதால் சாலையின் இரு மருங்கிலும் கார்கள்
பூத்துக்குலுங்கின. சிலர் கடலை நோக்கி விரைந்தனர். அதைப் பார்ப்பதற்கு எங்கள்
ஊர் பெரிய கண்மாய் போல் இருந்தது.


கப்பல் பயணம் இங்கிருந்து சாத்தியம். அங்கே ஒரு கப்பல் தன்னை ஒரு டைட்டானிக்காக
இமிடேட் செய்ய முற்பட்டு தோற்றுக்கொண்டிருந்தது. வித்தியாசமான பெயர் தெரியா
கடல் பறவைகள் உற்சாகமாய், "ஹேய்.... எப்பிட்றா இருக்கே....? செளக்கியமா.....?"
என நீண்ட நாட்கள் பழகிய நண்பர்களைப் போல் நம் தலைக்கு மேலே ஜிவ்வியது.


வானமும் நீரும் எங்கோ தூரத்தில் ரகசியமாய்
முத்தமிட்டுக்கொண்டிருந்தன....வெள்ளையர்களும் இதை ரசித்து அதனை தன் துணைகளுடன்
மெய்யாக்கிக்கொண்டிருந்தனர்....(வேந்தே.... இப்பொழுது சரிதானே...? )


அப்படியே அருகே இருந்த GAP என்ற ஒரு துணிக்க்டைக்குச் சென்றோம். உதய், மொய்ன்
என்ற இளைஞர்கள் என்னுடன் வந்தனர். எனக்காக ஒரு ஜீன்ஸ் எடுக்க பிரம்மப்
பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தனர். ஏனெனில் நான் இந்தியாவில் இருந்தவரை ஜீன்ஸ்
இதோ இங்கே "ஜீன்ஸ்" என்று எழுதியிருப்பதைக் காட்டி இதுதான் ஜீன்ஸ் என்றால், "ஓ
அப்படியா....?" என்று ஆச்சரியமாய் நம்பக்கூடிய ரகம்.


என்னுடைய அளவிற்கு அங்கே இல்லை. சிறுவர்கள் ஆடை பகுதியில் இருக்கலாம் என்றனர்.
அங்கேயும் இல்லை. பின்னர் எப்படியோ ஒரு ஜீன்ஸ் கிடைத்தது. ட்ரையல் ரூமில்
ட்ரையல் பார்த்தபொழுது அது கொஞ்சம் சரியாகத்தான் இருப்பது போல் பட்டது.


அதை மடிக்கும்பொழுது கவனித்தேன். அதன் பின்புற பாக்கட்கள் நைந்து
போயிருந்தன...நண்பர்களிடம் கோபித்துக்கொண்டேன்...ஏன் இப்படி நைந்து போன ஜீன்ஸை
எடுக்குறீர்கள்....? என்று...


"என்ன சார் இது....? நீங்கள் இன்னும் 18 வது நூற்றாண்டிலேயே வாழ்கிறீர்கள்.
ஜீன்ஸ் என்றால் இப்படித்தான் நைந்து இருக்க வேண்டும்...இதுதான் ஃபேஷன்.... என்ன
இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க..? " என்றனர்....


அட நான் சமீபத்தில்கூட நம் குழுமத்தில்


"ஏழை
கந்தல் துணி
அணிந்தால்....
பாவம்
அவன் ஒரு ஏழை....


அதையே
பணக்காரன்
அணிந்து மினுக்கிட்டால்
அதுதான்
லேட்டஸ்ட் ஃபேஷன்.... "


இது இப்பொழுது என் கண்முன்னே நிகழ்கிறது.... அதுவும் அது எனக்கே நிகழ்கிறது...


இதுவே எங்கள் கிராமமாக இருந்தால்....? ஓசிக்குக் கிடைத்தாலும்
வாங்கமாட்டோம்...ஆனால் இங்கே ஏறக்குறைய நம் ஊர் மதிப்பில் ரூபாய் 1440 கொடுத்து
கிழிந்த துணியை, புதுத்துணி என்றும் அதுதான் லேட்டஸ்ட் ஃபேஷன் என்றும்
வாங்குகிறேன்....


காலம் ரொம்ப கெட்டுப்போச்சுங்க....


ஒரு காலத்துல யானைப் படை ரொம்ப பலம் வாய்ந்ததா இருந்தது...ஆனா இப்ப...?
பூனைப் படை ன்னு ஒன்னு வந்துருக்காம்....


அப்றம் அந்தக் காலத்ல அடி வாங்குனவன் அழுவான்...
ஆனா இப்ப அடி கொடுக்றவன், "ஆ...ஊ...அக்கு..." ன்னு கத்துரான். கேட்டா கராத்தே
ங்குறான்....


அந்தக்காலத்ல மாவாட்ற கல்லு நிலையா நிக்கும். அம்மிக்குழவிதான் சுத்தும்...
ஆனா இப்ப ...?
அம்மிக்குழவி நிக்குது... அந்தக் கல்லு சுத்துது...


இதானா கால மாற்றங்கள் ன்றது.... ? காலம் ரொம்ப ரொம்ப மாறீட்டதுன்னு மட்டும்
தெரியுது...

Friday, March 30, 2007

மேலே வானம்...கீழே நியூ யார்க்...

மேலே வானம்...கீழே நியூயார்க்...

வானம்-1

*வேந்தன் ஐயா அவர்களுடன் உரையாடல்*


**
இன்று வேந்தன் அவர்கள் என்னுடன் அலைபேசியில் உரையாடினார்...


அவர், சங்க இலக்கியங்களைப் பற்றியும் வரலாற்றையும் பற்றி பேசினார்...
என்க்கோ நம்ம கேப்டன் ஸ்டைல்ல சொன்ன படிப்ல புடிக்காத ஒரே வார்த்தை வரலாறு...


வரலாறு ல 39 மார்க் வாங்கி, "அம்மா
, நான் பத்தாங்கிளாஸ் பாசாயிட்டேன்"னு குதிச்சவன்....


அப்றமா ட்ரெயினிங் ஆரம்பிச்சது... வேந்தன் ஐயா இன்னொரு முறை தொடர்பு கொள்வதாய்
சொன்னார்...


திரை கட்டிருந்தாங்க... லைட்டெல்லாம் ஆஃப் பண்ணினாங்க...


ஆஹா... பய புள்ளக சினிமா போடப்போறாங்க போல ன்னு ஒரே சந்தோசம்...! விசிலு
ஒன்னுதான் அடிக்கல...(ஏன்னா தெரியாது...)


Business Intelligence ன்னு டெட்டிலு போட்டாங்க...


சரி இங்கிலீஷு ப்டமாக்கும் னு நெனச்சேன்...


அப்றமாத்தான் தெரியுது... அதத்தான் நடத்தப்போறாங்கன்னு....


கொஞ்ச நேரத்ல தூக்கம் வந்துச்சு....


பழைய ஞாபகம் வந்துச்சு....


சென்னை ஐ.ஐ.டி யில் ராம்குமார் ராம்குமார் னு ஒரு வாத்தியார். அவர்தான்
எங்களுக்கு DSM (Data Structure & Manipulation ) னு ஒரு பேப்பருக்கு அந்த
செமஸ்டர் முழுசுமா தாலாட்டிப் பாடினார்...


அவர் கிளாசுக்குள்ள வர்ரப்ப ரொம்ப உற்சாகமா இருப்பேன்...
கிளாஸ் முடிஞ்ச உடனே... அத விட 1000 மடங்கு உற்சாகமாயிடுவேன்...


என்ன ரகசியம்னா-


கிளாஸ் ஆரம்பிச்ச உடனே கொட்டாவி வரும்...
அப்றமா ஒரு பாட்டு வரும்...


கண்கள் எரிகின்றது...
தூக்கம் வருகின்றது...
பாடம் யார் கேட்பதோ...
பரீட்சை யார் எழுதுவதோ... ன்னு


ஜேசுதாஸ் உரிமைக்குரல்ல விழியே கதைஎழுதுன்னு பாடினதை எங்களுக்காக இப்டி
பாடிட்ருப்பார்....எப்பவுமே...(நான் சின்ன வயசுல்ருந்தே...!)


அப்றம் சுகமான கனவு வரும்... ஒரு சினிமா ஓடும்... கிளாசு முடியப்போறப்ப நம்ம
சிவா (என்னோட கிளாஸ்மேட் அண்டு பக்கத்து சீட்) எழுப்பி உடுவான்...


தூங்கினதால உற்சாகமாயிருக்கும்...


இங்கனயும் அப்டித்தான் கதை...


அவர் (வாத்தியார்) எதோ டேட்டாபேஸ், டேபிளு ன்னு சொல்லிக்கிட்ருந்தார்...


எனக்கொ அட நம்ம வீட்ல இருக்ற தேக்கு மர டேபிளப் பத்தி இவருக்கு எப்டி தெரியும்
னு ஒரே ஆச்சர்யம்...


On 12/16/06, Raveendran Krishnasamy wrote:




- Hide quoted text -
- Show quoted text -

> நண்பர்களே,,


> மேலே வானம்...கீழே நியூ யார்க் என்று ஒரு தொடர் எழுதலாமா ன்னு
> யோசிக்கிறேன்... அந்த கைசின்னம் மாதிரி தெனம் ஒரு அனுபவம்...


> நீங்க சொல்லுங்க... தாங்க முடியுமா...?


> கனாக்காலம் விரைவில் தொடர்கிறேன்... இந்த வாரம் பணி நிமித்தமாய் வெளியே
> இருக்கிறேன்...


> --
> அன்புடன்
> சக பயணி
> ரிஷி ரவீந்திரன்


> "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
> "நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
> "உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

மேலே வானம்...கீழே நியூ யார்க்...

நண்பர்களே,,


மேலே வானம்...கீழே நியூ யார்க் என்று ஒரு தொடர் எழுதலாமா ன்னு யோசிக்கிறேன்...
அந்த கைசின்னம் மாதிரி தெனம் ஒரு அனுபவம்...


நீங்க சொல்லுங்க... தாங்க முடியுமா...?


கனாக்காலம் விரைவில் தொடர்கிறேன்... இந்த வாரம் பணி நிமித்தமாய் வெளியே
இருக்கிறேன்...


--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."